வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான் . "" வா ஆமையே ! வா ! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் . நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா ? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய் ! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன் ... ஹி ... ஹி ... ஹி ...'' என்று சிரித்தபடி , தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன் . வேடனைக் கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை . "" வேடனே ! என்னைப் பிடிக்க நீ யார் ? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது ?'' என்று துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை கேட்டது . "" ஆமையே ! நான் உன்னை விட மேலான மனிதப் பிறவியில் இருப்பவன் . எனக்கு எல்லா சக்தியும் இருக்கிறது . உன்னைக் கொன்று தின்னவும் என்னால் முடியும் ! அதே நேரத்தில் உன்னை உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும் . "" எனது பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது ! நீ ஒர
Comments
Post a Comment