Skip to main content

Popular posts from this blog

ஆமை... ஆமை...

வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான் . "" வா ஆமையே ! வா ! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் . நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா ? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய் ! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன் ... ஹி ... ஹி ... ஹி ...'' என்று சிரித்தபடி , தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன் . வேடனைக் கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை . "" வேடனே ! என்னைப் பிடிக்க நீ யார் ? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது ?'' என்று துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை கேட்டது . "" ஆமையே ! நான் உன்னை விட மேலான மனிதப் பிறவியில் இருப்பவன் . எனக்கு எல்லா சக்தியும் இருக்கிறது . உன்னைக் கொன்று தின்னவும் என்னால் முடியும் ! அதே நேரத்தில் உன்னை உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும் . "" எனது பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது ! நீ ஒர

பொற்காசு

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவனுக்கு மீன் என்றால் உயிர் . ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான் .  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான் . பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை . அரசனைப் பார்த்து , "" நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால் , நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள் . ஆனால் , பரிசு பெறுபவன் , ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே , அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான் . அதனால் , அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் !'' என்றாள் . "" நீ சொல்வது சரிதான் . ஆனால் , கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது ?'' என்று கேட்டான் அரசன் . "" அந்த மீன் ஆணா ? பெண்ணா ? என்று

வசியமந்திரம் !

செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான் . அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை . அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள் .  அவன் சிறிது பணமும் , படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . அவன் வெகு தூரம் நடந்து சென்றான் . வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது . அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான் . குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார் . அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது . அதை அடித்துக் கொன்றான் . சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார் . "" தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன் . அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும் ,'' என்றார் . அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது . "" அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள் ,'' என்றார் முனிவர் . அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்