நயாகரா நீர்வீழ்ச்சி இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருந்தது . நீர்வீழ்ச்சியின் அழகை , இரண்டு தேவதைகள் வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தனர் . அப்போது , அனீலஸ் என்ற பறவை , அந்த நீர்வீழ்ச்சியின் அருகே வந்தது . தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்தனர் . "" அதோ பார் அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்துள்ளது ,'' என்றது ஒரு தேவதை . "" ஆமாம் ... ஆமாம் ... அனீலஸ் பறவை , பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் . அது நீராடுகிற காட்சியைக் காண்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் . ஒரு வகையில் நாம் இருவருமே யோகம் செய்தவர்களாக இருக்கிறோம் ...'' என்றது மற்றொரு தேவதை . அனீலஸ் பறவையோ , தன் அருகே இரண்டு தேவதைகள் நின்று கொண்டிருப்பதை கவனித்தபடியே , பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது . அதே நேரத்தில் , நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது . நீர் வேகமாகத் தரையை நோக்கிப் பாயத் தொடங்கியது . வேகமாக இழுப்பு விசையோடு பாய்ந்த நீர் , அனீலஸ் பறவையையும்