Skip to main content

ஆமை... ஆமை...

வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான்.

""வா ஆமையே! வா! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய்! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன்... ஹி... ஹி... ஹி...'' என்று சிரித்தபடி, தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன்.

வேடனைக் கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை.

""வேடனே! என்னைப் பிடிக்க நீ யார்? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?'' என்று துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை கேட்டது.

""ஆமையே! நான் உன்னை விட மேலான மனிதப் பிறவியில் இருப்பவன். எனக்கு எல்லா சக்தியும் இருக்கிறது. உன்னைக் கொன்று தின்னவும் என்னால் முடியும்! அதே நேரத்தில் உன்னை உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும்.

""எனது பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது! நீ ஒரு அற்பமான பிறவி. இந்த ஏரியில் அங்குமிங்குமாக அலைந்தபடி இருக்கிற சிறிய உயிரினம் தானே நீ! உன்னிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது! உன் கறி சுவையாக இருக்கும்...''

""நாங்கள் உங்களைப் போன்ற மனித இனத்தை எதிர்க்கும் சக்தி இல்லாதவர்கள் என்ற ஒரே பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தானே, வேடர்களாகிய நீங்கள் எல்லாரும் எங்களைத் துன்புறுத்தி வருகிறீர்கள்!

""ஒருவேளை உங்களை நேருக்கு நேராக எதிர்க்கிற ஆற்றலை ஆண்டவன் எங்களுக்கு வழங்கியிருந்தால், நீங்கள் எங்களை இப்படித் துன்புறுத்தி கறி சமைத்து சாப்பிடுவீர்களா? இல்லை சாப்பிடத்தான் முடியுமா என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!'' என்று காட்டமாகக் கூறியது.

ஆமையின் பேச்சைக் கேட்டு வேடன் தடுமாற்றமடைந்தான். ஆமை பேசிய பேச்சுக்களை எல்லாம் ஒரு கணம் அவன் நினைத்துப் பார்த்தபோது, அதில் ஒருவித நியாயம் இருப்பதாகவே அவன் மனதுக்குத் தென்பட்டது.
அறிவுள்ள அந்த ஆமையைக் கூர்ந்து நோக்கிய வேடன், ""ஆமையே! நீ கூறிய புரட்சிகரமான கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். என்னைக் கண்டு பயந்து ஓடாமல், என் முன்னே நின்று என்னை எதிர்த்து துணிச்சலுடன் பேசிய உன் தைரியத்திற்கு நான் தலை வணங்கி நிற்கிறேன்,'' என்று கூறினான்.

அதைக் கண்ட ஆமை, ""வேடனே! நீ எனக்குத் தலை வணங்கி நிற்பதைவிட, இனிமேல் என் போன்ற உயிர்களைத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும்,'' என்றது.

ஆமையின் பேச்சை மதித்து, தன் கையில் இருந்த வில், அம்பு, ஈட்டி, கத்தி முதலிய ஆயுதங்களைத் தூக்கி வீசியெறிந்தான் வேடன். "இனிமேல் எந்த உயிரையும் கொல்லக்கூடாது!' என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.

***

Comments

Popular posts from this blog

பொற்காசு

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவனுக்கு மீன் என்றால் உயிர் . ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான் .  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான் . பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை . அரசனைப் பார்த்து , "" நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால் , நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள் . ஆனால் , பரிசு பெறுபவன் , ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே , அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான் . அதனால் , அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் !'' என்றாள் . "" நீ சொல்வது சரிதான் . ஆனால் , கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது ?'' என்று கேட்டான் அரசன் . "" அந்த மீன் ஆணா ? பெண்ணா ? என்று

வசியமந்திரம் !

செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான் . அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை . அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள் .  அவன் சிறிது பணமும் , படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . அவன் வெகு தூரம் நடந்து சென்றான் . வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது . அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான் . குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார் . அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது . அதை அடித்துக் கொன்றான் . சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார் . "" தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன் . அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும் ,'' என்றார் . அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது . "" அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள் ,'' என்றார் முனிவர் . அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்