Skip to main content

இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சியின் அருகே வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்தனர்.
""அதோ பார் அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்துள்ளது,'' என்றது ஒரு தேவதை.
""ஆமாம்... ஆமாம்... அனீலஸ் பறவை, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும். அது நீராடுகிற காட்சியைக் காண்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு வகையில் நாம் இருவருமே யோகம் செய்தவர்களாக இருக்கிறோம்...'' என்றது மற்றொரு தேவதை.
அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் நின்று கொண்டிருப்பதை கவனித்தபடியே, பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அதே நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத் தரையை நோக்கிப் பாயத் தொடங்கியது. வேகமாக இழுப்பு விசையோடு பாய்ந்த நீர், அனீலஸ் பறவையையும் தள்ளிக்கொண்டு சென்றது.
இதை எதிர்பாராத அனீலஸ் பறவை, தடுமாறியபடி பாய்ந்தோடும் நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் திடுக்கிட்டனர்.
அதில் ஒரு தேவதை, ""அதோ... அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்!'' என்றது.
உடனே மற்றொரு தேவதை, ""வேண்டாம்... அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும்,'' என்றது.
அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, ""உன்னை விடவும் நான் குறைந்தவளில்லை. அனீலஸ்ஸை காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது. எனவே, இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!'' என்று கூறியது.
உடனே மற்றொரு தேவதை, ""ம்கூம்... எனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை உனக்கு எப்படிக் கொடுப்பது? எனக்குக் கிடைத்த வாய்ப்பை நானே பயன்படுத்திக் கொள்கிறேன். நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக் கொடுக்க மாட்டேன்!'' என்று பிடிவாதமாகக் கூறியது.
அந்த நேரத்தில், "கீச்... கீச்...' என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தன. அங்கே தேவதைகளின் அருகே, அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
""தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை எப்போதோ இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து போராடியதால் தான் இப்போது உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்!'' என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தால் தலை குனிந்தனர். "நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே!' என்று வருத்தப்பட்டனர்.
""தேவதைகளே! ஏன் கவலைப்படுகிறீர்கள்? இனிமேலாவது உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்... மனிதர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, நீங்கள் இப்படி அலட்சியமாக இருந்தால், மிகுந்த ஆபத்தாகிவிடும்!'' என்று அறிவுரை கூறியது அனீஸ் பறவை. இரு தேவதைகளும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

***

Comments

Popular posts from this blog

ஆமை... ஆமை...

வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான் . "" வா ஆமையே ! வா ! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் . நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா ? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய் ! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன் ... ஹி ... ஹி ... ஹி ...'' என்று சிரித்தபடி , தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன் . வேடனைக் கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை . "" வேடனே ! என்னைப் பிடிக்க நீ யார் ? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது ?'' என்று துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை கேட்டது . "" ஆமையே ! நான் உன்னை விட மேலான மனிதப் பிறவியில் இருப்பவன் . எனக்கு எல்லா சக்தியும் இருக்கிறது . உன்னைக் கொன்று தின்னவும் என்னால் முடியும் ! அதே நேரத்தில் உன்னை உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும் . "" எனது பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது ! நீ ஒர

பொற்காசு

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவனுக்கு மீன் என்றால் உயிர் . ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான் .  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான் . பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை . அரசனைப் பார்த்து , "" நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால் , நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள் . ஆனால் , பரிசு பெறுபவன் , ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே , அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான் . அதனால் , அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் !'' என்றாள் . "" நீ சொல்வது சரிதான் . ஆனால் , கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது ?'' என்று கேட்டான் அரசன் . "" அந்த மீன் ஆணா ? பெண்ணா ? என்று

வசியமந்திரம் !

செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான் . அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை . அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள் .  அவன் சிறிது பணமும் , படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . அவன் வெகு தூரம் நடந்து சென்றான் . வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது . அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான் . குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார் . அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது . அதை அடித்துக் கொன்றான் . சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார் . "" தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன் . அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும் ,'' என்றார் . அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது . "" அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள் ,'' என்றார் முனிவர் . அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்